புதுதில்லி, டிச.9- மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ‘‘முந்தைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிஎஸ்என்எல், எம்டி என்எல்-க்கு 4-ஜி மற்றும் 5-ஜி சேவை தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை 4-ஜி சேவை தருவதற்கான எந்த நடவடிக்கை யும் இல்லை. இதன் காரணமாக, பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எஸ் தனது வாடிக்கையாளர்களை ஜியோவிடம் இழந்து வருகிறது. தனியார் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவு தருவது மட்டுமின்றி பிரதமர் மோடியே அதற்கு விளம்பரத் தூதராக விளம்பரங்களில் இடம் பெற்று வருகிறார்,’’ என்றார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட் சேபம் தெரிவித்தனர்.