திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மனு ஏற்பு!
ஈரோடு, ஜன.18- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 வேட் பாளர்கள் 65 வேட்புமனுக் களைத் தாக்கல் செய்திருந்த னர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக் கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடை பெற்றது. இதில், அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி கள் என்ற அடிப்படையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்தி ரகுமார், நாம் தமிழர் வேட்பா ளர் மா.கி. சீதாலட்சுமி ஆகி யோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாளாகும்.
டிரம்ப் பதவியேற்பு அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
புதுதில்லி, ஜன.18- அமெரிக்காவில் 2024 நவம்பரில் நடைபெற்ற தேர் தலில் அடுத்த ஜனாதிபதி யாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஜனவரி 20 (திங்கள்கிழமை) அன்று பதவியேற்கவுள் ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிர முகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து முதற் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம் பானிக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் மீண்டெழும் ஆர்பிஐ நம்பிக்கை
புதுதில்லி, ஜன.18- நடப்பு 2023-24 நிதியாண் டின் ஜூலை முதல் செப்டம் பர் வரையிலான 2-ஆவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.4 சதவிகி தமாக குறைந்தது. இது, முந்தைய ஏழு காலாண்டு களில் இல்லாத குறைவா கும். மேலும், முந்தைய நிதி யாண்டை ஒப்பிடும்போது (8.2 சதவிகிதம்) மிகமோச மான சரிவாகும். இந்நிலை யில், ஆர்பிஐ-யின் ஜனவரி மாத இதழில் ‘நாட்டின் பொரு ளாதார நிலை’ என்ற தலைப் பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், “உள்நாட்டு தேவைகள் மீண்டும் வலுவ டைவதால், இந்திய பொரு ளாதார வளர்ச்சி மீண்டெ ழத் தயாராகி வருகிறது” என்று சமாளிப்பு செய்யப்பட் டுள்ளது.
தில்லி தேர்தலில் 1,500 வேட்புமனுக்கள்
புதுதில்லி, ஜன.18- தில்லி சட்டப்பேரவை க்கு பிப்ரவரி 5 அன்று பொதுத்தேர்தல் நடைபெறு கிறது. மொத்தம் 70 இடங் கள் உள்ள நிலையில், வெள் ளிக்கிழமையன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், 981 வேட்பாளர் கள், 1,521 வேட்புமனுக்க ளைத் தாக்கல் செய்துள்ள னர். ஜனவரி 20 அன்று வேட்புமனு மீதான பரிசீ லனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யாக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என தில்லியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இஸ்ரேல் அமைச்சரவையும் ஒப்புதல் காசாவில் போர் நிறுத்தம்; இன்று முதல் அமலாகிறது!
காசா, ஜன.18- இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பு இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜனவரி 19 முதல் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. காசாவுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவையும் சனிக் கிழமை அதிகாலை ஒப்புதல் அளித்த தால், ஹமாஸ் உடனான 15 மாத போர் நிறுத்தமும், மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் தற்காலிகமாக முடி வுக்கு வருகிறது. யூதச் சட்டப்படி சனிக்கிழமை விடுமுறை தினம் என்ற போதிலும் முக்கிய மான முடிவு என்பதால் சனிக்கிழமை அதிகாலை வரையிலும் இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஜெருசலேம் நேரப்படி அதிகாலை ஒரு மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, போர் நிறுத் தம் 15 மாதங்கள் அமலில் இருக்கும். மேலும், ஒப்பந்தத்தின் படி, காசாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி களிலிருந்து கிழக்குப் பகுதி வரை இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டுமே என கூறப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடு தலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு ஈடாக நோய்வாய்ப்பட்ட 9 பேர் உட்பட 33 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஈரான் உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை!
டெஹ்ரான், ஜன.18- ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந் துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் சனிக்கிழமையன்று நுழைந்த அடையாளம் தெரி யாத நபர், நீதிபதிகள் அலி ரசினி (71), முகமது மோஹிசே (68) ஆகியோர் தங்கியிருந்த ஓய்வறைக்குள் நுழைந்து அவர்கள் இருவரையும் தான் கொண்டுவந்த கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம் பவம் தொடர்பாக தீவிர விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு ஜாமீன் கோரிய இருவர் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை, ஜன.18- கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்தாண்டு ஜூன் 19 அன்று விஷ சாராயம் குடித்து 69 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் கைதான சின்னத்துரை, சாகுல் ஹமீது ஆகிய இரு வரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை (ஜன.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே ரத்து செய்து விட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும், என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வரும் ஜன.23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
சிறுமி விழுந்து உயிரிழந்த விவகாரம் தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.18- விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (ஜன.17) நீதிமன்றத் தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவில், விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்த வில்லை என சிறுமியின் தந்தை பழனிவேல் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்க வில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் கூறவில்லை. சிறுமி மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணையை தொடர்ந்து, தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனு மீதான விசா ரணையை பிப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரையில் ஜன.29 இணைய வழி குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
சென்னை, ஜன. 18- தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப் பிரிவு சார்பில் எதிர்வரும் ஜனவரி 29ஆம் தேதி மெரினா கடற்கரை சாலையில் மாலை 5:00 மணிக்கு “சென்னை 1930 விழிப்பு ணர்வு நடைபயணம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இணையத்தில் உள்ள சைபர் குற்றங்களின் தடுப்பு பற்றியும் மற்றும் அதை சமூகத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடை முறை களை ஊக்குவிப்பது நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு நடை பயண மானது, மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து வகை நபர்களை யும் சேர்த்து சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடு வதற்கான வாய்ப்பாகும். இந்த நிகழ்ச்சி, சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, தனிப்பட்ட தக வல்களை பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பரா மரிப்பதில் உதவும் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.பொது மக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாது காப்பான இணைய சூழலை உருவாக்க அழைக்கின்றோம். அனைத்து பங்கேற்பாளர்க ளுக்கு நடைபயணம் முடித்தவுடன், பங்கேற் புக்கான அடை யாளமாக “பிளாக்செ யின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழை” பெறுவார்கள். நிகழ்ச்சிக்கு https:// 1930walkathon.in என்ற லிங் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சியில் டைடல் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி
சென்னை,ஜன.18- மதுரை, திருச்சிராப்பள்ளி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை, தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. திருச்சிராப்பள்ளியில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படு கிறது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே டைடல் பார்க் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டைடல் பார்க்கில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், இந்த இரண்டு டைடல் பூங்கா பணிக ளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தற்போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டிவனத்தில் டாபர் தொழிற்சாலை திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் அமைய உள்ள டாபர் நிறுவனத்தின் தொழிற் சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற் கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. 1,36,585 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் தேன், ஓடோ டெல், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க டாபர் நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய 300 ஆலிவ் ரெட்லி ஆமைகள்
சென்னை,ஜன.18- கடந்த இருவாரத்தில் 300-க்கும் அதிகமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. ஜெல்லி மீன்கள், மீன்களின் குஞ்சுகளை சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் குறைகிறது. ஆனால் கடல் ஆமைகள் பவளப்பாறையில் உள்ள பாசிகள் மற்றும் ஜெல்லி மீன்க ளையே சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் பாதுகாக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக் கத்திற்கு உதவுகிறது. இதில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழக கடற்பகுதிக்கு வருவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. கடற்கரையில் பல நாட்களாக ஆமைகள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் வனத்துறை சார்பாக ஆமைகள் குறித்து 2 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவளம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் நடத்தப் பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலைமோதிய பயணிகள் கூட்டம் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சென்னை,ஜன.18- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, பயணி கள் ஒட்டு மொத்தமாக, சென்னை திரும்ப தொடங்கியதால், விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள் இரட்டைக் கட்டணம் முறையை செயல்படுத்துவதால் பயணி கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக் கிழமை சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும், அதே ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் டிக்கெட் கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. மதுரை- சென்னை ரூ.10,046 முதல், ரூ.17,991வரை, சென்னை- மதுரை ரூ.3,975 முதல் ரூ.4,947 வரை. திருச்சி- சென்னை ரூ.6,049 முதல் ரூ.11,089 வரை, சென்னை- திருச்சி ரூ.4,862 முதல் ரூ.5,282 வரை என உள்ளன. இது குறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகை யில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாமல், பல விமானங்கள் காலியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அங்கி ருந்து சென்னைக்கு வருகின்ற விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறைந்த கட்டண டிக்கெட்டு கள் அனைத்தும் ஏற்கனவே காலி ஆகிவிட்டதால், அதிக கட்டணங்கள் டிக்கெட்டுகள் மட்டுமே தற்போது இருக்கிறது. எனவே அந்த அதிக கட்டணங்களை, நாங்கள் பயணிகளிடம் வசூலிக்கிறோம். அது பயணிகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இனிமேல் வரும் காலங்களில், பயணிகள் தங்களுடைய பயணத்தை முன்னதாகவே திட்டமிட்டு, 2 மாதங்களுக்கு முன்னதாகவே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டால், இதைப்போல் அதிக கட்டணங்கள் செலுத்தாமல் குறைந்த கட்டணங்களிலேயே பயணிக்கலாம். அதை விடுத்து கடைசி நேரத்தில் விமான டிக்கெட் எடுத்து பயணிப்பதால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது என்று தெரி விக்கின்றனர்.