சென்னை, டிச. 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக ஆர். வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட 24-ஆவது மாநாடு டிசம்பர் 14, 15 தேதி களில் தோழர் என். சங்கரய்யா (எஸ்.பி.எஸ். திருமண மண்டபம், சைதாப்பேட்டை) நினை வரங்கில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் தொடக்க உரை யாற்றினார். புத்தக வெளியீடு சென்னை நகரின் கட்சி வரலாற்றை மையப் படுத்திய ‘சென்னையில் செங்கொடி வித்துக்களும், விழுதுகளும்’ பேரா. பிரபாத் பட்நாயக்கின் ‘பாசிசத்தை வீழ்த்துவது வர லாற்றுக் கடமை’, கவிஞர் ஆ.சி. விஜிதரணின் ‘மரித் தோர் பாடல்கள் - பாலஸ்தீன் கவிதை தொகுப்பு’ ஆகிய நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. என். சங்கரய்யா சிலை திறப்பு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்க ரய்யா மார்பளவு உருவச் சிலையை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி வாழ்த்துரை வழங்கி னார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன் நிறைவுரையாற்றி னார். புதிய மாவட்டக்குழு தேர்வு 36 பேர் கொண்ட மாவட்ட குழுவின் செயலாளராக ஆர். வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் களாக க. பீம்ராவ், ஏ. பாக்கி யம், கே. வனஜகுமாரி, சு.வெள்ளைச்சாமி, எஸ். குமார், ச. லெனின், ஜி. செந்தில்குமார், பா. பால கிருஷ்ணன், டி. சுந்தர், ம.சித்ரகலா, எம். தாமோ தரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் சிதிலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளை அகற்றி, அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்பு களை கட்டி வழங்குவதோடு, அரசே பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்; பூங்கா, விளையாட்டு திடல்கள், மாநகராட்சி அரங்கம் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவினையும், பொது இடங்களில் நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி. வெங்க டேஷ் நன்றி கூறினார்.