tamilnadu

ஒன்றுமில்லாத ஒன்றிய பட்ஜெட்

கோவை, பிப்.1–  சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்கென ஒன்றிய பட்ஜெட் டில் ஒன்றுமில்லை என கோவை தொழில் அமைப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தாக்கல் செய்தார். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, வைரத்திற்கு வரி குறைப்பு என கார்ப்ரேட் நிறுவனங் களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டா கவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூலப்பொருட்களின் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி,  கொரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற வற்றால் உற்பத்தி பாதிப்பு ஆகிய வற்றால் அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வரு கிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வை ஏற்படுத்துகிற அறிவிப்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் என கோவை தொழில் முனைவோர் கள், அமைப்பினர் பெரும் எதிர் பார்ப்போடு இருந்தனர்.

ஆனால், கடன் வட்டி தள்ளுபடி, தவணைக் காலம் நீட்டிப்பு, மூலப்பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் என ஏதும் பட் ஜெட்டில் இடம்பெறாதது தொழில் அமைப்புகளை அதிர்ச்சிக்குள் ளாக்கி உள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தொழிற்துறையினர் தயாரில்லாத நிலையில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் பத்திரிகையா ளர் சந்திப்பைக்கூட இவ்வாண்டு தவிர்த்து விட்டனர். இதுகுறித்து தொழில் அமைப்பின் நிர்வாகிகளி டம் பேசுகையில், கோவை இந்திய தொழில் கூட்ட மைப்பின் (சிஐஐ) தலைவர் அர்ஜுன் பிரகாஷ் கூறுகையில், கல்வி, மருத்துவம் ஆகிவற்றில் டிஜிட்டல் ரெக்கார்ட்ஸ் முறையை கொண்டு வந்துள்ளனர். இது வரவேற்புக்குரி யது. அதேநேரம், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் நிறு வனங்களுக்கும், தனி நபர்களுக் கும் வரிச்சலுகைகள் இல்லை. ஜி.எஸ்.டியிலும் மாற்றங்கள் இல்லை. உள்நாட்டு தயாரிப்பு களை முன்னேற்ற கெமிக்கல், எலக்ட்ரானிக் கஸ்டம்ஸ் டூட்டியை அதிகரித்துள்ளனர். இந்த பட்ஜெட் டில் வரிகள் பெரிதாக குறைக்கப்பட வில்லை என வேதனை தெரிவித் தார்.

புதிய திட்டங்கள் இல்லை

கொடிசியாவின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவ சர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. சிறு, குறு, தொழில் நிறு வனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50 ஆயி ரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது என்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், உள்நாட்டு உற்பத்தி யை அதிகரிக்கும் வகையில் 68 சதவிகித ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சிறு, குறு நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தும். இவை வர வேற்புக்குரியது. அதேசமயத்தில் புது வரிகள் இல்லை. வரிகளை குறைக்கவும் இல்லை, வரிகளை அதிகரிக்கவும் இல்லை. தொழில் முனைவோருக்கு என புதிய திட்டங்களும் இல்லை. தொழில் முனைவோர் பலர் கடன்களில் மூழ்கி யுள்ளனர். அதை மீட்கவும் அறி விப்பு இல்லை. கொரோனா தொற் றால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள் ளதால், அதை மீட்க பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்து இந்த பட்ஜெட்டில் எதிர் பார்த்தோம். ஆனால் எந்த புதிய அறிவிப்பும் அதில் இல்லை. இந்த முறை எங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது. ஆனால் எதிர் பார்த்த பட்ஜெட் அறிவிப்புகள் இல்லை. தொழில் நிறுவனங்கள் முன்னேற அறிவிப்புகள் இருந்தி ருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த பட்ஜெட்டில் வரவேற்பும் உள்ளது, அதிருப்திகளும் உள்ளது என்றார்.

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்

கோப்மா அமைப்பின் சார்பில் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் சிறு-குறுந்தொழில் நிறுவனங்க ளுக்கு உதவ 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் திறன் மேம்பாட்டு புத்துணர்வு பயிற்சிகள் இணையம் வழியாக அளிக்கப்படும் என்ற அறி விப்பை வரவேற்கிறோம். அதே சம யம் கடந்த 1 ஆண்டிற்கும் மேலா கவே விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுக்கின்ற மோட்டார் பம்ப்செட் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த அனைத்து மூலப் பொருட் களும் உச்சபட்ச விலையேற்றத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து அதி கரித்தும் வருகிறது. மூலப்பொருட் களின் விலைகளை குறைப்ப தற்கு எடுக்கப்படும் உடனடி நட வடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறா தது எங்களுக்கு பெருத்த ஏமாற் றத்தை அளித்துள்ளது. லாக்டவுன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளா கவே சிறு-குறு பம்ப்செட் உற்பத்தி மற்றும் அதைச்சார்ந்த சார்பு தொழில் நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்து விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து நிற்கின் றன. ஆகவே, எங்களுக்கு உதவும் வகையில் வங்கிக் கடன்களில் வட்டி மானியம் மற்றும் வட்டி குறைப்பு  போன்றவைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந் துள்ளோம். மேலும், தனிநபர் வரு மான வரி விலக்கு அதிகரிக்கப்படா ததும் குறுந்தொழில் முனைவோர் களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) ஜேம்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அறிவித்து உள்ள 2022 - 2023 -க்கான பட்ஜெட்டில் பெருமளவில் குறு சிறு தொழில்  முன்னேற்றத்திற்கான அறிவிப்பு இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. குறு சிறு தொழில்களின் நடைமுறையில் உள்ள சிக்கலில் இருந்து பாதுகாக்க எவிதமான அறிவிப்பும் இல்லாதது, குறிப்பாக கொரோனா பாதிப்பு மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்டு பிரச்ச னைகளால் முடங்கி இருக்கும் குறு சிறு தொழில்களுக்கு உதவிட  ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 சத வீதம் கோரிக்கை ஏற்கப்பட வில்லை. பொருளாதார நெருக்கடி யில் இருந்து குறு சிறு தொழில் களை பாதுகாக்க கொரோனா பாதித்த காலத்தில் இருந்து 2023 வரை எவ்வித மான ஜப்தி நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்ற கோரிக்கை மற்றும் மேற்கண்ட காலத்துக்கு வங்கிகள் விதிக்கும் அபராத வட்டி களை அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் என நாங்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்க்கப்படவில்லை. குறு சிறு தொழில்களுக்கான தனி  அமைச்சகம் உருவாக்கிட வைத்த கோரிக்கை ஏற்கவில்லை. குறுந் தொழில்களுக்கான தனிகடன் திட்டம் குறைந்த வட்டியில் வழங்கிட அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கப்படவில்லை. ஆகவே, வரும் பட்ஜெட் கூட்டதொடரிலாவது குறுந்தொழில்களின் பிரச்சனை களை தீர்வதற்கான அறிவிப்புகளை அறிவித்து தொழில்களை பாது காத்திட வேண்டுகிறோம் என்றார்.