சென்னை, ஜன. 31 - முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு, அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. முகாம்க ளுக்கு வெளியில் வசிக்கும், 32 ஆயிரத்து 242 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராமு மணிவண்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதன்பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது போல், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும்படி அரசை கட்டாயப் படுத்த முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த னர்.