சின்னாளப்பட்டி,பிப்.23- அம்மையநாயக்கனூரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்திசிலை கண்டெ டுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யை அடுத்த அம்மையநாயக்கனூ ரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. செவ்வா யன்று பைரவர் சன்னதி பகுதியில் குழி தோண்டியபோது சுமார் ஒன்றரை அடி உயரம்,மூன்றரை அடி அகலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை கண்டெ டுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அறநிலை யத்துறை அதிகாரிகள் சிலையை மீட்ட னர். இதுகுறித்து மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி பேராசிரியர் கண்ணன் கூறுகை யில், இந்த நந்தி சிலையானது உருவத்தில் சிறியதாகவும் கொம்பு கட்டையாகவும், முகம் திமில் சிறியதாகவும், அதிக பனை யில்லாத ஒருவரிசை மணி கழுத்தில் அணிந்திருப்பதால் சிற்ப வடிவமைப்பு பணியை வைத்து கணித்தால் 12, 13 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருக்க லாம். பிற்கால பாண்டியர்களின் கல்வெட் டுக்கள் இக்கோவிலில் இருப்பதால் பாண்டி யர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டி ருக்கலாம். அதனைத் தொடர்ந்து நாயக் கர்கள் ஆட்சிகாலத்தில் சைவ, வைனவ ஒற்றுமையை ஏற்படுத்த சிவலிங்கமும் பெருமாளும் ஒரே கருவரையில் வைத்து வழிபட்டதாகவும் இருவரும் இணைந்து கோவில் எதிரே உள்ள தெப்பத்தில் தெப்பத்திருவிழா கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. அந்த வழியில் இந்த நந்தி சிலை கிடைத்திருக்கலாம். இதே போல இக்கோவிலை சுற்றி ஏராளமான பாண்டியர் கால கல்வெட்டுக்கள், சிலைகள் இருக்க லாம் என தெரிவிக்கின்றனர். எனவே தொல்லியல் துறையினர் சிறப்புக்கவனம் செலுத்தி இக்கோவிலை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று கூறினார்.