விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
விழுப்புரம், ஜூன் 13 - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நூறு நாள் வேலை திட்டத்தில் நியாயமற்ற பணி வழங்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி யில் வியாழக்கிழமை நூறு நாள் வேலை திட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் சேறும் சகதியுமாக உள்ள கடுமையான இடங்களில் தொடர்ந்து பணி வழங்கி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மாற்றுத் திறனாளி மங்கை தலைமையில் மாற்றுத் திறனாளிகள் திடீரென விக்கிரவாண்டி-செஞ்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக அப்பகுதியில் கிராம சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஊராட்சி நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.