tamilnadu

img

வாழ்வாதாரமிழந்து தவிக்கும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள்

திண்டுக்கல், மார்ச் 18- வாழ்வாதாரம் இழந்த மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு அரசு  மாதா மாதம் நிவாரணம் கொடுக்க  முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு  சாலை போக்குவரத்து தொழிலாளர்  சம்மேளனம் (சிஐடியு) கேட்டுக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் சாலைப் போக்கு வரத்து சம்மேளனத்தின் சிறப்பு மாநாடு  சிஐடியு அரசு போக்குவரத்து தொழி லாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில உதவித்தலைவர் ஏ.பி.அன்பழகன் தலைமை வகித்தார். சிஐடியு திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் கே.ஆர்.கணேசன் வரவேற்றார்.  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: இந்தியாவில் சரக்கு போக்கு வரத்து, பயணிகள் போக்குவரத்தில் சுமார் 4 கோடி வாகனங்கள் பயன்பட்டு வருகின்றன. கனரக சரக்கு வாக னங்கள், லாரிகள், மினிலாரிகள், சிறிய சரக்கு வாகனங்கள், பேருந்துகள், மேக்சிகேப், பயணிகள் பேருந்து, டாக்சிகள், கால்டாக்சிகள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என பல வகை யான வாகனங்கள் உள்ளன.

 இவ்வாகனங்கள் பயணத் தேவை யையும், சரக்கு போக்குவரத்தையும் ஈடுகட்டி வருகின்றன. மோட்டார் தொழிலில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். நாடு  முழுவதும் மோட்டார் தொழில் 90 சதவீதம் சுயதொழிலாகவே உள் ளது. உரிமையாளர்களே, தொழி லாளர்களாக உள்ள மோட்டார் தொழில் 60 சதவீதம் இந்திய மக்களின் பயணத் தேவையையும், சரக்கு போக்கு வரத்தையும் மேற்கொண்டு வருகிறது.  10 கோடி குடும்பங்களின் வாழ்வாதா ரமாகவும் இத்தொழில் உள்ளது. ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு ‘1988 மோட்டார் வாகன சட்டத்தை’ திருத்தி தொழிலை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டது. மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி புதிய புதிய உத்தரவுகளை வெளி யிட்டு தொழிலை நிலையற்ற தன்மை க்கு உள்ளாக்கியுள்ளது.  தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை உயர்வு, உதிரிபாகங்களின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, டோல்கேட் கொள்ளை போன்றவை காரணமாக தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் மோட்டார் தொழில் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது டன் பல லட்சம் பேர் வேலை இழந்து  வாழ்வாதாரமின்றி உள்ளனர். மோட்டார்  தொழிலைக் காப்பாற்ற ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

கார்ப்பரேட்மயமாக்கும் முயற்சி

தொழில் நெருக்கடியைப் பயன் படுத்தி இத்தொழிலை கார்ப்பரேட்மய மாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வாக னப்பதிவு எப்சிஇ லைசென்ஸ் வழங்கும் உரிமை போன்றவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்பணி யில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.  தமிழகத்தில் சமீபகாலமாக ஆன்லைன் அபராதம், ஸ்டிக்கர் ஒட்டுவது, வேகக் கண்காணிப்பு கருவி  பொருத்துவது போன்றவற்றின் மூலம் சாலைப்போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளின் நெருக்கடி தொழில்பாதிப்பு போன்ற கார ணங்களால் மோட்டார் தொழிலில் ஈடு பட்டுள்ள சிறு உரிமையாளர்கள், ஓட்டு நர் பயிற்சி பள்ளிகள், ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், கால்டாக்சிகள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 

வேலைநிறுத்தக் களம் இறங்குவோம்!

எனவே, ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்,  வாழ்வாதாரம் இழந்துள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் மெக்கானிக்கு களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், ஆன்லைன் முறை யை முறைப்படுத்த வேண்டும், லஞ்ச  ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மோட்டார் தொழிலுக்கு உரிய பாதுகாப்பும், கடன் உதவியும் வழங்க வேண்டும். இவ்வாறு மாநா ட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி யும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கைவிடக் கோரியும்,  2022 மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்த த்தை வெற்றி பெறச் செய்வது எனவும் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இம்மாநாட்டில், தமிழ்நாடு சாலை  போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் உதவி தலைவர்கள் ஏ.பி.அன் பழகன், எஸ்.கே.தியாகராஜன், சம்மேளன பொருளாளர் பி.குப்புசாமி, சிஐடியு திண்டுக்கல் மாவட்டச் செய லாளர் கே.ஆர்.கணேசன், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தலைவர் அப்சல், தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர்  முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜானகிராமன், தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்.முரளி தரன், தமிழ்நாடு கால் டாக்ஸி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்க தலை வர் பி.ஆர்.சாமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் நல கூட்டமைப்பு தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை பெருநகர லாரி உரிமை யாளர் மற்றும் டிரான்ஸ்போர்ட் நல சங்க  தலைவர் விஜி ஜெயகுமார், அனைத் திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை தலைவர் குணசேகரன், சென்னை லோக்கல் லாரி உரிமையாளர் சங்க  தலைவர் வெங்கடசாமி, உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு தொழிலாளர் சங்க செயலாளர் பூபதி, உரிமைகள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல், ஆவின் தனியார் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்க தலைவர் நியூட்டன் ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர். சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் தனசாமி நன்றி கூறினார்.