கொச்சி, ஜன.27- நடிகை கடத்தல், தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த அதிகாரி களை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் திலீப்பின் முன்ஜாமீன் மனு மீதான பரிசீலனையை கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது. அதுவரை இந்த வழக்கில் அவரை கைது செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 3 நாட்களாக திலீப்பிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 33 மணி நேர விசாரணையின் விவரங்கள் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் திலீபையும் காவலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பி பாலச்சந்திரகுமார் பதிவு செய்த திலிப் மற்றும் கூட்டாளிகளின் உரையாடல்களை, ரஃபியும் அருண் கோபியும் கேட்டனர். இது குறித்து குற்றப்பிரிவு எஸ்பி மோகனச்சந்திரன் கூறியதாவது:
ஒலி மாதிரியை அறிவியல் ஆய்வு க்கு அனுப்பும் நடவடிக்கை இது. திலீப்பின் சகோதரர் அனூப், மைத்துனர் சூரஜ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப் பட்டது. சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்த இரு வரும் தலையிட்டதாக பாலச்சந்திரகுமார் தெரி வித்திருந்தார். பணமாகவும் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தியதாக வெளியான தகவலை உறுதிப் படுத்துவதற்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சூரஜின் வருமான ஆதாரத்தை யும் குற்றப்பிரிவு விசாரிக்க உள்ளது. விசார ணையின் ஒரு பகுதியாக, இயக்குநர்கள் ரஃபி மற்றும் அருண் கோபி, திலீப்பின் தயாரிப்பு நிறுவனமான கிராண்ட் புரொடக்க்ஷன்ஸ் மேலாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் அடங்கிய குழு சாட்சியமளிக்க குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.