தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற மாபெரும் அரசு நலத்திட்ட விழாவில் 70ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். (செய்தி : 4)