சென்னை, ஜன. 2 - காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று தமிழக காவல் ்துறை தலைவர் சைலேந்திரபாபு புத்தாண்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்கு நரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல் துறையினருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், 2021ஆம் ஆண்டு பல்வேறு சவால்களை தமிழக காவல்துறை வழக்கம் போல் தைரியமாக எதிர்கொண்டது.
ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவுநாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணா மலை தீபம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடத்தி முடித்துள் ்ளோம். சட்டம் ஒழுங்கு திறம்பட பேணி காக்கப் ்பட்டது என்று கூறியள்ளார். குற்றப்புலனாய்வு மெச்சத்தகும் வகையில் இருந்தது, இவை அனைத்திற்கும் காரணம் காவல்துறையில் உள்ள அதிகாரி கள் மற்றும் காவலர்கள்தான். அர்ப்பணிப்பு அனைத்து சூழ்நிலையிலும் அரண்போல நின்றதாலேயே இது சாத்தியமானது. தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி தொடர்பான கொலைகளில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதைபோல சாதி அரக்கனின் பெயரால் நடந்த கொலை களில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடதமிழகத்தில் பழிக்கு பழி வாங்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை “ஆபரேசன் ரவுடி வேட்டை” என்ற பெயரில் ஒடுக்கி வருகி றோம்.
அதன் விளைவாக தமிழகம்முழுவதும் கடந்த 2021ல் 3 ஆயிரத்து 325 ரவுடிகளை கைது செய்துள்ளோம். ஆயிரத்து 117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். போதைப் பொருளுக்கு எதிராக என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை இல்லாத வகையில் அதிக பட்சமாக 23 டன் கஞ்சா, 20 கிலோஹெராயின் பறிமுதல் செய்துள்ளோம். கொரோனா 2 ஆவது அலையில் 139 காவலர்கள் இன்னு யிரை இழந்துள்ளனர். காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும் சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார்.