tamilnadu

img

தென்காசியில் ரூ.230 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள்

தென்காசி, டிச.8- தென்காசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் 238 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசிய தாவது: தென்காசி வந்தவுடன் இந்த மண்ணை போல என் மனம் குளிர்ச்சியடைந்துள்ளது. எப்போதும் சாரல் வீசும் இந்த மண், சென்னை மாநகரத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் இத மாக உள்ளது. அனைத்து வளங்களையும் பெற்றுள்ள ஒரு மாவட்டம் ன்காசி.விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த மண் இது. பூலித்தேவருக்கு நெற்கட்டும் செவலில் மணி மண்டபம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்.

பராக்கிரமபாண்டியரால் கட்டப்பட்டுள்ள பழமையான கோவிலுக்கு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் குழு அமைக்  கப்பட்டு கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப் பட்டது கழக தலைவர் கலைஞர் ஆட்சியில் தான். கழக ஆட்சி தொடங்கி 19 மாதங்கள் ஆகி யுள்ள நிலையில், இதுவரை தமிழக மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நெஞ்சை நிமிர்த்தி பதில் அளிப்பேன். ஏனென்  றால் அவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்யப் பட்டுள்ளது. உதாரணமாக, தென்காசி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி  இப்போது கூறுகிறேன்.11490 மக்கள் குறை தீர்மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது. 27 கோடியே 77 லட்சம் மகளிர்  சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், 49,900 மாண வர்கள் பயன் அடைந்துள்ளனர். 2990 திரு நங்கைகள் பலன் அடைந்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை தென்காசி மாவட்டத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டே போகலாம்.

தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார்  பட்டியை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கக் கூடிய  ஒரு மாணவி ஆராதனா, ஒரு கடிதம் எனக்கு எழுதி னார். அதில் தான் படித்து வரும் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கை இந்த மேடையிலே நிறைவேற்றப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வுபூர்வமாக இருக்கிறோம்.தமிழகத்தை நாட்டின் தலை சிறந்த மாநிலமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள்.ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப் படும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தாலே தமிழகத்தின் வளர்ச்சி தெரியும் என்றார்.