tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டெபாசிட் தொகை ரூ. 4 ஆயிரமாக உயர்வு

சென்னை,ஜன.22- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில்  வெளியிடப்பட்டது. அதன் அடிப்படை யில் புகைப்படத் துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி  நடந்தது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிக்கல் இன்றி நடத்துவதற்காக உரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளை எப்படி கையாள்வது என்று தேர்தல்  ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4  ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு  ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத் தொகையாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி களுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பெயரிலொ, கட்சிகள் பெயரிலொ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில்  எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை ஒலிப்பெருக்கி பயன் படுத்துவது தொடர்பாக கடும் கட்டு ப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

;