கும்பகோணம், டிச.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி என்ப வர் அண்ணல் அம்பேத்கருக்கு உடை அணி வித்தும் நெற்றியில் திருநீறு பட்டை அணிந் தும் காவி(ய) தலைவன் என்றும் சுவரொட்டி கள் தயாரித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டு தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மத கலவரத்தை தூண்டும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கும்ப கோணம் குருமூர்த்தி, மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகனை சந்தித்து புகார் அளித்தனர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றினர். ஆனால், இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை கைது செய்யாததால், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள டிஎஸ்பி அலு வலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் முற்று கையிட்டதால் டிஎஸ்பி அசோகன் தலை மையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தியை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் விசாரணைக்கு பின் இவர் மீது வழக்கு தொடரப்படும் என வும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் பதற்றச் சூழ்நிலையையும் மதக் கலவ ரத்தையும் உருவாக்கும்
இந்து முன்னணியை சேர்ந்தவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அண்ணல் அம்பேத்கருக்கு மதச் சாயம் பூசி, மதக் கலவரத்தை தூண்டும் குரு மூர்த்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் தகவல்கள் நுட்பத்தின் மூலம் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படுத்துதல் மத மோதலை உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என முழக்க மிட்டனர். முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு மாநிலக் குழு உறுப்பி னர் கண்ணன், மாநகர செயலாளர் செந் தில்குமார், கும்பகோணம் ஒன்றிய செயலா ளர் பி.ஜேசுதாஸ், விசிக மண்டலச் செயலா ளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் உறவழகன், மாநில மகளிர் அணி செய லாளர் தமிழினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.