tamilnadu

மீன்வள திருத்த மசோதாவை எதிர்த்து மார்ச் 18-இல் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 1- தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டம் தமிழ்நாடு மீனவத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பி.சின்னத்தம்பி தலைமையில் சென்னையில் திங்களன்று (பிப். 28) நடை பெற்றது. கூட்டத்தில் டி.எம்.மூர்த்தி, ஆர். ஆறுமுகம், (ஏஐடியுசி), எஸ்.ஜெயசங்கரன் (சிஐடியு), சி.தா.சேரன், ஜென்னிஸ் (விசிக)  என்.இப்ரா`ஹிம், டி.பார்த்திபன் (மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்), கு.பாரதி (தென்னிந்திய மீனவர் சங்கம்), லிங்கன் (வழக்க றிஞர்) ஜெ.கோசுமணி (தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்) கபடி பி.மாறன் (தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம்), டாக்டர் ஆர்.வி.குமரவேல் (தேசிய மீனவர் பேரவை) பு.கெனிஷ் (எ) கைசன், தர்மராஜ் (மீனவம் காப்போம் மக்கள் இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர் இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு மீனவர்களை யும், மீன்பிடித் தொழிலையும் பாதுகாப்பதாக கூறி ‘நீலப் பொருளாதாரக் கொள்கை’, ‘மீன்வள திருத்த மசோதா 2021’,  ‘சாகர்மாலா திட்டம்’ ஆகிய வற்றை அமலாக்குவதில் தீவிரம்  காட்டி வருகிறது. ஆனால், உண்மையில் இது மீனவர்க ளுக்கும், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்க ளுக்கும், இந்தியாவின் கடல்வள  பாதுகாப்பிற்கும் நேர் எதிரானவை யாகும். மீனவர்களின் வாழ்வாதா ரத்தை அழித்து விட்டு, மீன்பிடித்  தொழிலை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு ஒப்படைக்கிறது.

கடற்கரை கனிமச் சுரங்கங்களை தோண்டி எடுத்தல், சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் கடற்கரை யில் உல்லாச விடுதிகளை கட்டி  ஆக்கிரமித்து மீனவர் கிராமங் களை வெளியேற்றுதல் ஆகியவை, இந்தியாவின் கடல்  வளத்தை கார்ப்பரேட் கொள் ளையடிக்க வழிவகுப்பதாகும். சுற்றுச்சூழலை மாசுபடுத்துவ தாகும். எனவே நீலப் பொருளா தாரக் கொள்கை, மீன்வள திருத்த மசோதா, சாகர்மாலா திட்டம் ஆகியவற்றை ஒன்றிய கைவிட வேண்டும். இலங்கை கடற்படை தமிழக  மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்து வது, கைது செய்வது, மீன்பிடி படகுகளை கைப்பற்றுவது, சேதப்படுத்துவது போன்ற இலங்கை அரசின் அத்துமீறல் களை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மீனவர், மீன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில்  வரும் 18ஆம் தேதி கடற்கரை  மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற உள்ளன. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 22ஆம் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டங்களிலும், ஒன்றிய அரசு  எடுத்து வரும் தொழிலாளர்க ளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்ச் 28, 29 தேதிகளில்  நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் அனை வரும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.