நீண்ட நாட்களாக ஒரே கோட்டத்தில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், ஊழல் புகார் கொடுக்கும் தொழிலாளர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும், அரசாணைப்படி 16 ஆயிரத்து 525 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 31) அடையாறு மண்டல அலுவலகம் முன்பு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சீனிவாசுலு, துணைப்பொதுச் செயலாளர்கள் தேவராஜ், ராஜன், முனுசாமி மற்றும் சிவக்குமா, சிஐடியு தலைவர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை உள்ளிட்டோர் பேசினர்.