கர்நாடகாவில் மதவெறியை தூண்டிவிட்டு கலவரத்திற்கு வித்திடும் பாசிச சக்திகளை கண்டித்து வியாழனன்று கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஜோதிகுமார், மலரவன், நேருதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.