தருமபுரி, மார்ச் 22- தருமபுரி ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நூறு நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி யடைந்த அனைத்து விவசாய தொழிலா ளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். தருமபுரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.ரவி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்து, பொரு ளாளர் ஈ.கே.முருகன், மாவட்ட துணை செய லாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கணேசன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் என். கந்தசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.