100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும்; தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும்; கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குஜிலியம்பாறையில் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சி.பாலசந்திரபோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.