மன்னார்குடி, ஜன.6- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த துப்புரவு தொழிலா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும், அனைத்து துப்புரவு பணியா ளர்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ அமல்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பி.கண் ணாடி வீரன், டி.திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை வகித்தனர். பி.பழனி, பூண்டி மணி, பி.வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகை யன் விளக்கிப் பேசினார். கௌரவத்தலைவர் ஜி.ரெகுபதி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.கோவிந்த ராஜ், மாநில குழு உறுப்பினர் ஏ.பி.டி.லோகநாயகி, ஒன்றிய செயலாளர் ஏ.பி.தனுஷ்கோடி, சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகி கள் ஜி.முத்துகிருஷ்ணன், ஆர். ராஜேந்திரன், தியாக சிவ சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.