tamilnadu

வலுக்கட்டாய கடன் வசூல் தடுப்புச் சட்ட மசோதாவுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

வலுக்கட்டாய கடன் வசூல் தடுப்புச் சட்ட மசோதாவுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு 

மேலும் திருத்தங்களைச் சேர்க்க கோரிக்கை

சென்னை, ஏப்.27 - தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை அன்று துணை முதலமைச்சரால் அறிமுகப் படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங் களை பதிவு செய்தல், அவற்றின் நடவடிக் கைகளை வெளிப்படைத் தன்மையாக்குதல் மற்றும் வலுக்கட்டாய கடன் வசூலைத் தடுப்ப தற்கான புதிய சட்ட மசோதாவை அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.  இம்மசோதா மாதர் சங்கத்தின் நீண்ட கால  போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூரில் நடை பெற்ற சிறப்பு மாநாட்டில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் இதற்கான கோரிக்கை களை தமிழக அரசிடம் முன் வைத்திருந்தது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக் கட்டாயமாக கடன் வசூலித்தால், மூன்று முதல்  ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இத்தகைய குற்றங்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. கட்டாய வசூலால் கடன் வாங்கியவர் தற்கொலை செய்தால், அந்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். கடன் வாங்கியவர்களையோ அவர்க ளது குடும்பத்தினரையோ மிரட்டவோ, அவர்க ளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.  என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், இச்சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

மாதர் சங்கத்தின் கூடுதல் பரிந்துரைகள்

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மற்றும் மாநில பொதுச் செயலா ளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட மசோதாவில் பின்வரும் கூடுதல் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்  என்று கோரியுள்ளனர்: 1. வருமான வரம்பு விதிக்க வேண்டாம்:  பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின ருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3 லட்சம் என்ற  குடும்ப ஆண்டு வருமான வரம்பை நீக்க வேண்டும். 2. பதிவாகாத சீட்டு நிறுவனங்களையும் உள்ளடக்குதல்: பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனிகளையும் (chit fund companies) சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். 3. சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல்: குவிந்து கிடக்கும் புகார்களை விசாரிப்பதற்கு  மாவட்டங்கள் தோறும் சிறப்பு நீதிமன்றங் களை ஏற்படுத்த வேண்டும். 4. இன்சூரன்ஸ் கட்டாயம் மீதான கட்டுப்பாடுகள்: கடன் வாங்குபவர்களை இன்சூரன்ஸ் எடுக்க கட்டாயப்படுத்துவதைத் தடுக்கும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். தற்போ தைய நிலையில், கடன் வாங்குபவர் இறந் தால், இன்சூரன்ஸ் தொகை நிறுவனத்திற்கே செல்கிறது. இது தற்கொலைகளை ஊக்கு விக்கும் நிலையை உருவாக்கலாம். 5. வட்டி விவரங்கள் தெளிவாக்கம்: வட்டி விகிதம், அபராத வட்டி, தவணை வசூ லிப்பு முறை ஆகியவற்றை தெளிவாக வரைய றுக்க வேண்டும். செயலாக்கக் கட்டணம் 0.5% க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், வட்டிக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். 6. கூடுதல் குற்றங்கள் சேர்ப்பு: வலுக் கட்டாய நடவடிக்கைகள் பட்டியலில், குடும்ப உறுப்பினர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைப்பதையும் சேர்க்க வேண்டும். 7. வங்கிகளின் ஏஜெண்டுகள் மீதான கட்டுப்பாடு: ஆர்பிஐ பதிவு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் ஏஜெண்டுகளுக்கும் இச்சட்டம் பொருந்த வேண்டும். வங்கிகள் தங்கள் கடன்களை தனியாருக்கு விற்கும்போது, அவர்களும் இச் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். 8. புகார் விசாரணை முறை சீரமைப்பு: பதிவு  அதிகார அமைப்பு வழியாக காவல்துறைக்கு புகார்களை அனுப்புவதில் உள்ள காலதாம தத்தை தவிர்க்க, கிரிமினல் தன்மையுள்ள புகார்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 9. பதிவில்லா நிறுவனங்களுக்கு கடுமை யான தண்டனை: பதிவு செய்யப்படாத, உரிமம் இல்லாத நிறுவனங்கள் மீறல்களில் ஈடுபட்டால், அவற்றுக்கு தண்டனை விதிப்ப தோடு, வாங்கிய கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

கூடுதல் கோரிக்கைகள்

திறமையற்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச நாள் கூலியை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும். கேரளாவைப் போல, தமிழ்நாடு கூட்டு றவு வங்கியையும், மாவட்ட கூட்டுறவு வங்கி களையும் ஒன்றிணைத்து தமிழக வங்கியை  உருவாக்கி, சுய உதவிக்குழு பெண்களுக் கும், நலிந்த பிரிவினருக்கும் சலுகை வட்டி யில் கடன் வழங்க வேண்டும். இச்சட்டத்தை சட்டமன்றத்தில் முழுமை யான விவாதத்திற்குப் பிறகு இறுதி செய்ய  வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.