ஜனநாயக மாதர் சங்க திருவாரூர் நகர 17 ஆவது மாநாடு
திருவாரூர், ஜுன் 16- திருவாரூர் நகர 17 ஆவது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநாடு மாவட்டச் செயலாளர் பா. கோமதி தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாதர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகரத் தலைவராக ஆரோக்கியமேரி, நகரச் செயலாளராக வி. சுதா, பொருளாளராக இ. இராஜேஸ்வரி, துணைத் தலைவராக வினோதினி, துணைச் செயலாளராக அபிநயா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்து மிரல்களை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்கள், பெண்கள் என பலருக்கும் மிகவும் ஆபத்தான நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.