tamilnadu

img

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரக் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரக் கோரிக்கை

தருமபுரி, ஜூலை 10- ஆக்கிரமிப்புகளை அகற்றி சின்ன மாட்லாம்பட்டி ஏரியை தூர்வார உத்தர விடக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமாட்லாம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகு தியிலுள்ள ஏரியானது, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பொதுமக்க ளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. இதனிடையே, இப்பகுதியில் சிலர் ஏரி பகுதியை ஆக்கிரமிப்பு செய்து  வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதால், மழைக்காலங்களில் ஏரிக்கு வர வேண் டிய மழைநீர் வராமல் ஏரி தண்ணீரின்றி காய்ந்து போனது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் தட்டுப்பா டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை  மனு அளித்தும், யாரும் கண்டுகொள் ளாத நிலை உள்ளது. எனவே, ஆக்கிர மிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார உத்தரவிட வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள், காரி மங்கலம் வட்டாட்சியரிடம் வியாழ னன்று மனு அளித்தனர். அதனைப் பெற்று கொண்ட வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் துள்ளார்.