tamilnadu

img

அதிக வேலைப்பளு சுமையுடன் மகப்பேறு மருத்துவர்கள்

சென்னை,நவ.8-  மருத்துவப் பணியாளர் பற்றாக் குறையால் மகப்பேறு மருத்துவர்கள் அதிக வேலைப்பளு சுமையுடன் உள்ளனர். எனவே போதுமான மருத்து வப் பணியாளர்களை நியமிக்க வேண் டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மகப்பேறு மற்றும் பெண் நோய் மருத்துவர்கள் (OB-GYN) கடுமையான பணிச்சுமையை எதிர் கொண்டுள்ளனர். பல மருத்துவர்கள் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை 24 மணி நேர அவசரப் பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரிவான ஆய்வறிக்கையின்படி, மாநிலத்தில் உள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மை யங்கள் (CEmONC) பெரும்பாலான வை குறைந்த ஊழியர்கள் எண்ணிக் கையிலேயே இயங்கி வருகின்றன. சில மையங்கள் மிகக் குறைந்த பணி யாளர்களுடன் செயல்பட்டு வருவ தால், மருத்துவர்கள் மாற்று முறையில் தொடர்ந்து பணிபுரியவேண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி: v    மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 490 பணியிடங்கள் v    மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் 475 பணியிடங்கள் v    பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ் 28 பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் பல  மகப்பேறு மற்றும் பெண் நோய் மருத்துவர்கள் (OB-GYN) அதிக வேலைப்பளு காரணமாக பணியை விட்டு விலகியுள்ளனர்” என்றார். மற்றொரு மருத்துவர், “தற்போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே மையத்தை நிர்வகிக்கின்றனர். இதன் விளைவாக, நாங்கள் வாரத்திற்கு மூன்று முறை 24 மணி நேர அவசர பணியில் ஈடுபட வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார். ஆண்டுக்கு சுமார் 9 முதல் 10 லட்சம் பிரசவங்கள் மாநிலத்தில் நடைபெறுகின்றன. இவற்றில் 99.9 சதவீதம் அரசு மருத்துவமனை களிலேயே நிகழ்கின்றன.  மருத்துவர்களின் கூற்றுப்படி, தாய்-இறப்பு விகிதத்தை 10 ஆயிரம் பிரசவங்களுக்கு 45-இல் இருந்து 30 ஆக குறைக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்தை நிறைவேற்ற போதுமான பணியாளர்கள் தேவை. புதிய நியமனங்கள் செய்யப்படும்  தமிழக மக்கள் நல்வாழ்வு-சுகா தாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணி யன் கூறுகையில், “மகப்பேறு மற்றும் பெண் நோய் மருத்துவர்களுக்கான (OB-GYN)  பற்றாக்குறை குறித்து அறிந்துள்ளோம். புதிய நியமனங் களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன” என்றுதெரிவித்தார். மாநில அரசு உடனடியாக நட வடிக்கை எடுத்து, போதுமான மருத்து வப் பணியாளர்களை நியமித்து, மகப் பேறு மருத்துவர்களின் பணிச்சுமை யை குறைக்க வேண்டியது அவசியமானது என்று மருத்துவர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.