tamilnadu

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் 3 கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு

மதுரை, டிச.21- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகி கள் கூட்டம் மதுரை காலேஜ் ஹவுஸில் ஞாயி றன்று மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது. மாநில பொதுச் செய லாளர் கே. கர்சன் ,  பொருளாளர் ஏ. வர தராஜன்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழக அரசு போக்கு வரத்து கழக நிர்வாகம் மருத்துவப்படி ரூ.100  - ஐ ,ரூ, 300   ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும் . குறைந்தபட்ச ஓய்வூதியம். ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.7850 - என்பதை அமல்படுத்தவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய  வேண்டும் . ஓய்வு பெறும் நாளன்றே  அனைத்து ஓய்வுகாலப்பணப்பலன்களையும் வழங்க வேண்டும் . குடும்ப ஓய்வூதிய நிலுவைகள் தீர்வு செய்யப்பட வேண்டும்

. ஓய்வூதியத்திற்கு அரசு நிதிநிலை அறிக்கை யில்  நிதி ஒதுக்கி பிரதி மாதம் 1 ஆம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும் . மே 2020 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் . 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 01.09.1992 முதல் 31.08.1998 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுகால சேமநலநிதி ரூபாய் ஆயிரம் ஒப்பந்தப்படி வழங்க வேண்டும் . ஊதிய ஒப்பந்த உயர்வு,  நிலுவைகள் வழங்கப்பட வேண்டும் . பொது நீதிமன்றத் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும் . தேவையற்ற மேல்முறையீடுகளை அரசும் போக்குவரத்து கழக நிர்வாகமும் கைவிட  வேண்டும் என்று வலியுறுத்தி முதல் கட்ட போராட்டம் டிசம்பர் - 27 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, இரண்டாவது கட்டமாக ஜனவரி 25 - ஆம் தேதி அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் பல்ல வன் சாலையில் அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மூன்றா வது கட்டமாக மார்ச் 10ஆம் தேதி பல்லவன் சாலையில் உள்ள பென்சன் டிரஸ்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.