tamilnadu

img

ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை பலி எண்ணிக்கை 211 ஆக உயர்ந்தது

மாட்ரிட், நவ.2- ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த  திங்கட்கிழமை அன்று 50 வருடம் இல்லாத  அளவில் கனமழை வெளுத்து வாங்கியது.  இந்த கனமழை வெள்ளத்தால் அந்நாட்டின் கிழக்குப் பகுதி மாகாணமான வாலென்சியா மற்றும் அதற்கு அருகில் உள்ள நகரங்கள் உருக்குலைந்துள்ளன.  சுமார் 1 மாதம் பெய்ய வேண்டிய மழை  ஒரே நாளில் பெய்ததே இந்த நிலைமைக்கு  காரணம் என ஸ்பெயின் வானிலை ஆய்வு  மையங்கள் தகவல் தெரிவித்து வரு கின்றன.  இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.  வெள்ளநீர் இன்னும் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியா மல் தவித்து வருகின்றனர். சேறும், சகதி யுமாக இருப்பதால் கடுமையான சிக்க லுக்கு இடையே மீட்புப் பணிகள் நடந்து வரு வதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது.