லாஸ் ஏஞ்சலஸ், ஜன.12- அமெரிக்காவின் லாஸ் ஏஞ் சல்ஸ் நகரில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயின் காரணமாக 12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தின் தெற்கு பகுதி யில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. இத்தகைய சூழலில் ஹாலிவுட் நகரம் என அழைக்கப் படும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலி சேட்ஸ் பகுதியில் ஜனவரி 7ஆம் தேதி திடீரென காட்டுத் தீ ஏற்பட் டது. காட்டுத் தீயால் சேதமான மொத்தப் பரப்பு சான்பிரான் சிஸ்கோ, பிட்ஸ்பர்க், பாஸ்டன் நக ரங்களின் எல்லைகளை விட அள வில் பெரியது என்ற நிலையில், ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் பகுதி களில் காட்டுத் தீக்கு வீடு, கார் என 12,000-க்கும் அதிகமான கட்ட மைப்புகள் நாசமாகின. இந்நிலையில், காட்டுத்தீ பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11இலிருந்து 16ஆக அதிகரித்துள்ளது. லாச் ஏஞ்சல் ஸில் ஈட்டன் பகுதிகளில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதிகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை நள்ளிரவு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பாதிக் கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன் றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். காட்டுத்தீயின் தாக் கம் அதிகரித்து வருவதை கருத்திற் கொண்டு, அப்பகுதிகளிலிருந்து மேலும் 1.66 லட்சத்துக்கும் மேற் பட்டோர் வெளியேறவும் அறி வுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊரடங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசிக்கும் உலகளவில் பிரபல மானவர்களும், பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர்களுமான மெல் கிப்சன், லெய்டன் மீஸ்டெர், ஆதம் ப்ராடி, பாரிஸ் ஹில்டன் உள் பட பிரபலங்கள் பலரது வீடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. காட்டுத்தீ எரியும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடு மையான விதிகள் பின்பற்றப் பட்டு வருகிறது. ஊரடங்கு உத்த ரவை மீறுவோர் கைது செய்யப்பட் டுள்ளனர். 12 லட்சம் கோடி இழப்பு காட்டுத் தீ லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமின்றி அருகில் இருக்கும் நகரங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் சுமார் 150 பில்லியன் டாலர்கள் (ரூ.12 லட்சம் கோடி) வரை சேதங்கள் ஏற்பட்டு இருப்ப தாக தகவல் வெளியாகி இருக்கி றது. இது அமெரிக்க வரலாற்றி லேயே இல்லாத அளவு சேதம் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது. அமெரிக்க வரலாற்றி லேயே மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்திய ஒரு காட்டுத் தீ இது என ஜே.பி.மார்கன் நிறுவனம் கூறுகிறது. அதாவது கலிபோர்னி யாவின் ஆண்டு ஜிடிபியில் 4% அளவுக்கு இந்த காட்டுத் தீயால் ஏற்பட்ட இழப்பீடு இருக்கிறது என சொல்லப்படுகிறது.
கலக்கத்தில் காப்பீட்டு நிறுவனங்கள்
எதிர்பாராத நிகழ்வால் காப்பீடு பெற்ற மற்றும் காப்பீடு பெறாத வர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ரும் தங்களுடைய வீடுகளையும், வாகனங்களையும் இழந்துள்ள னர். சுமார் 10,000 குடியிருப்புகள் இந்த காட்டுத் தீயால் சேதம் அடைந்திருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு வீட்டின் சராசரி விலை 3 மில்லியன் டாலர்களாக (ரூ. 25 கோடி) இருக்கும் என கணிக்கப்பட்டுள் ளது. இதனால் காப்பீட்டு நிறுவ னங்களுக்கும் காட்டுத் தீ பெரிய தலைவலியாக உருவெடுத்துள் ளது. ஏனெனில் இந்த பகுதியை சேர்ந்த அனைவருக்கும் அவர்கள் காப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி யுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் காப்பீட்டு நிறுவனங் கள் இதுபோல காட்டுத் தீ ஏற்ப டக்கூடிய வாய்ப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் வீடுகளுக்கான காப்பீட்டினை வழங்க முன் வராது அல்லது அதிக ப்ரீமியம் தொகை யை கேட்கலாம் என கூறப்படு கிறது. இதனால் கலிபோர்னியா பகுதி யில் வசிக்கக்கூடிய மக்கள் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது காப் பீடு திட்டங்களுக்கு அதிக தொகை யை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் கலிபோர்னியா பகுதி யில் காட்டுத் தீ மட்டுமின்றி அடிக் கடி சூறாவளி தாக்கமும் நிகழ்கி றது என்பது குறிப்பிடத்தக்கது.