நைஜீரியாவை மிரட்டும் கனமழை 200-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
அபுஜா, ஜூன் 01- மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட, மத்திய நைஜீரியா மற்றும் நைஜர் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நைஜர் மாநிலத்தில் உள்ள மோக்வா நகரம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். கனமழை காரணமாக சனிக்கிழமை அன்று 151 வரை உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டலாம் என நைஜர் மாநில அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கூறியுள்ளார். மேகவெடிப்பு இல்லை வடக்கு நைஜீரியா பகுதி தீவிர வறட்சி பகுதியாகும். கானல் நீரைப் போன்று வருடத்தின் சில வாரங்களில் மழை பெய்யும். ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தால் சாதாரண பருவமழை கூட அதீத அளவில் கனமழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. மேகவெடிப்பு எதுவும் நிகழவில்லை. அதே போல வறட்சி பகுதி என்பதால் வடக்கு நைஜீரியா மழையை சமாளிக்க போதுமான கட்டமைப்புகள் எதுவும் கிடையாது. இதனால் தான் வடக்கு நைஜீரியா இதுவரை இல்லாத அளவில் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த பருவமழை காரணமாக மயிடுகுரி நகரில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 30 ர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.