tamilnadu

img

தியாகி அசோக்கின் தந்தை மரணம்

சென்னை, மே 19-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வரு மாறு: நெல்லை மாவட்டத்தின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பொருளாளராக செயல்பட்டு வந்த ஆதிக்க சக்தி களால் படுகொலை செய்யப் பட்ட மறைந்த தோழர் அசோக் கின் தந்தை தோழர் முருகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை  பலனின்றி மே 19 அன்று  காலை  காலமானார். அவரது மறை விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக்கொள்கிறேன். தோழர் முருகன் சிறுவயதி லேயே இடதுசாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு தீவிரமாக செயல்  பட்டு வந்தவர். தோழர் அசோக் அவர்களின் மரணத்திற்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இயக்கங்களில் பங்  கேற்றும், கட்சியுடன் நெருக்க மாகவும் செயல்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள் ளார்.

வாலிபர் சங்கம்

அநீதிக்கு எதிரான பாதை யில் அச்சமின்றி பயணித்த தோழர் முருகன் அவர்களது மர ணம் இடதுசாரி இயக்கத்திற் கும் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். இந்  திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு தோழர் முருகன் அவர்களுக்கு நெஞ்  சார்ந்த அஞ்சலியை தெரி வித்துக்கொள்கிறது. அவரை  இழந்து வாடும் குடும்பத்தின ரின் கரம்பற்றி ஆறுதல் தெரி விக்கிறது என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர்  எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.