சென்னை,டிச.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் வரலாற்று ஆசிரியருமான தோழர் என். ராமகிருஷ்ணன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என். சங்கரய்யாவின் சகோதரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவரும்,தந்தைபெரியார் குறித்து சிறப்பான நூலை எழுதியவருமான (96 நூல்களை எழுதியவர்) தோழர் என். ராமகிரு ஷ்ணன் மறைவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றோம்.அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தி னருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தோழர்களுக்கும் ஆறுதலையும், இரங்க லையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.