tamilnadu

img

“இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை”

அன்பிற்கினிய அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களே!  சமீப நாட்களாக தேர்தல் குறித்த பதிவுகளில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாட்சாப் குழுக்களில் ‘கரிசனம்’ என்ற வார்த்தை மேலோங்கி உள்ளது. யாருடைய கரிசனம் உண்மை யானது? எது போலியானது என்பதை நாம் உணர வேண்டும். போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளும் பறித்த அன்றைய அதிமுக ஆட்சியும், இன்றைய ஒன்றிய அரசு(பாஜக)ம் - காட்டும் திடீர்  கரிசனம் போலியானது. புதிய ஓய்வூதிய  திட்டத்தை கொண்டு வந்து - அதற்கு எதிராகப் போராடிய அனைத்து சங்க நிர்வாகி களையும் சிறையில் தள்ளியதும்- கிட்டத்தட்ட 2 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்தது தான் கரிசனமா? சரண்டர் உள்ளிட்டு அனைத்து பயன்களையும் பறித்ததும், 2017 முதல்  போராடுகிற போதெல்லாம் வேடிக்கை பார்த்ததும் நேற்றைய ஆட்சியாளர் கள் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைவர்கள் தானே? பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதற்கு ஒன்றிய அரசிடம் நிதியைக் கேட்டு போராடிக் கொண்டி ருக்கின்றன பல்வேறு மாநிலங்கள். அதுமட்டுமல்ல, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை வஞ்சிப்பது ஒன்றிய ஆட்சியாளர்கள் அல்லவா? ‘தமிழ்நாட்டில் 1988  மகத்தான போராட்டத்தில் நம் முன்னோர்களின் உயிர் தியாகத்தில், 1989- ஊதிய மாற்றம் ஊதியக்குழு; இதுவரை நான்கு ஊதிய குழுக்கள் -

ஊதிய மாற்றங்கள்; ஓரளவுக்கு கௌரவமான  ஊதியம். இவற்றில் எல்லாம் கடந்த கால திமுக அரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் சமீப நாட்களில் - பல்வேறு துறைகளில்- சமூக நீதி பாதுகாக்கப்பட்டு இட ஒதுக்கீட்டு முறையில் காலியிடங்கள் நிரப்பு தல்; பதவி உயர்வு வழங்குதல்; கடுமை யான நிதி நெருக்கடியிலும் DA வழங்கி வருவது போன்றவை பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள்: இந்த நிலையில், பறிக்கப்பட்ட உரி மைகள் வழங்க வேண்டும்; பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற  நம்முடைய கோரிக் கைக்கு செவி சாய்த்து, அறிக்கை வெளியிட்டுக் காட்டிய முதல்வரின் கரிசனம் உண்மையானது; வரவேற்புக்குறியது! அதேவேளை, ஒன்றியத்தில் யார்  ஆள வேண்டும் என்பதும் முக்கியம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யைப் பார்த்து, இது இடதுசாரிகளின்   அறிக்கை போன்று உள்ளது என்று பயப்படுகிறது பாஜக. கடந்த 10 ஆண்டுகளில் - தொழிற்சங்க ஜனநாயகத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை சிதைத்தது பாஜக ஆட்சி. இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை. தமிழ்நாட்டு முதலமைச்சரின் கரிசனம் உண்மையானது; அது நமக்கானது; அவர் அளித்த வாக்குறு தியை நிச்சயம் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு அரசு ஊழியர், ஆசிரியர் பெரு மக்கள், இந்தியா கூட்டணியை ஆட்சி யில் அமர வைப்போம்!

நெ.இல.சீதரன், மாநிலத்தலைவர், 
பி.கிருஷ்ணமூர்த்தி, 
பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்