தஞ்சாவூர், ஆக.9- மாநில அளவில் நடை பெற்ற விளையாட்டுப் போட்டியில் 43 பதக்கங் களை வென்று இரண்டாம் இடம் பிடித்த காது கேளா தோர் பள்ளி மாணவ, மாண விகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கடந்த ஜூலை 29, 30 தேதிகளில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அய்யநாடார் ஜானகி அம்மையார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விளை யாட்டுப் போட்டியில், தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், கும்பகோணம் அருகே சாக்கோட்டை காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். இதில், கும்பகோணம் சாக்கோட்டை மாதா காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 14 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்று மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.