tamilnadu

img

மின்சார ரயிலில் மாணவர்களின் ஆபத்தான பயணம்

சென்னை, ஜூலை 19- திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். மேலும் பேருந்து, ரயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூ ரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்த போது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து  ஒரே பெட்டியில் ஏறினர். அவர்கள் ரயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். மேலும் ரயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும்  கூச்ச லிட்டபடியும் சென்றனர்.  இதனால் அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரயில் பொட்டியின் ஜன்ன லில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாண வர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.  பெரும்பாலான ரயில் நிலை யங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை என குற்றச்சாட்டாக கூறினர்.