tamilnadu

பிளாஸ்டிக் குப்பைகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து

கோயம்புத்துர் மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வன  உயிரின ஆர்வலர் முருகானந்தம், யானை ஒன்று போட்டுச் சென்ற சாணத்தில் பால் பாக்கெட் கவர், சாம்பார் பொடி பாக்கெட் கவர், நாப்கின், முகக் கவசம் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்தார். இரண்டு  ஆண்டு களுக்கு முன்னர் மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்குக்கு வரும் யானைகள் பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து உண்பதாகவும், அதனால் யானை களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.