புதுச்சேரி, டிச. 7- புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பாண்லே யில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், வெளி மாநில பால் கொள்முதலில் நடக்கும் ஊழலை நிறுத்தக் கோரியும் தரையில் பாலைக் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சிலை அருகே புதனன்று (டிச. 7) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள், கன்று குட்டிகளு டன் போராட்டத்துக்கு வந்திருந்தனர். அண்டை மாநிலங்களில் இருந்து புதுச்சேரி பாண்லேக்கு வாங்கப்படும் பால் ரூ.42 ரூபாய்க்கு மேலாக உள்ளது. உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கப்படும் பாலுக்கு 32 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். இதுபற்றி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினால், அவர் தட்டிக் கழிப்பதாகக் கூறி சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நிலவும் பால்தட்டு பாட்டை போக்க, பால் உற்பத்தி யாளர்களுக்கு மானியத்துடன் கறவை மாடு வாங்க கடன் வழங்க வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் வெளி மாநில பால் கொள்முதலை நிறுத்த வேண்டும். தட்டாஞ்சாவடியில் மூடப்பட்ட கால்நடை தீவன தொழிற் சாலையை மீண்டும் இயக்க வேண்டும். மானிய விலையில் கால் நடை தீவனம் வழங்க வேண்டும். ரூ.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பாண்லே நிர்வாகத்தில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், சிஐடியு செயலாளர் சீனுவாசன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய லாளர் சங்கர், இந்தியன் காபி அவுஸ் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன், சங்கத்தின் செயலாளர் அன்புமணி, ஜெய்சங்கர், காவேரி ஆகியோர் பேசினர்.