சென்னை, மார்ச் 11 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப் பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட டி.ஜெயக்குமார், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி டி.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கி, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளிகிழமைகளில் கையெ ழுத்திட வேண்டும். திங்கட்கிழமைதோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கையெ ழுத்திட வேண்டும் எனவும் உத்தரவில் குறிப் பிட்டுள்ளார்.