tamilnadu

வங்கக் கடலில் புயல் சின்னம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் சின்னம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக.17 - வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி யிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே ஞாயிற்றுக்கிழமை குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி யுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் சின்னம் ஆக.19 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு நிலவி  வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 23 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக் கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலை நிலவும் போது வெளியே செல்வதைத் தவிர்க்கு மாறும், அவசியமான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைக்கு மாறும் வானிலை நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.