tamilnadu

சேலம், நாமக்கல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி: ஐ.பெரியசாமி

சென்னை,ஜன.7- தமிழக சட்டப்பேரவை யில் வெள்ளியன்று (ஜன.7) கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் கூட்டுறவு துறையமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: “கடந்த 2020 - 21ஆம் ஆண்டுகளில் பயிர்க் கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி வரை குறியீடு நிர்ண யிக்கப்பட்டது. இதில் சேலம்  மற்றும் நாமக்கல் மாவட்டங்க ளில் பயிர்க் கடன் வழங்குவ தற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முறையே ரூ.746 கோடி மற்றும் ரூ.534 கோடி. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் கடன் உறுதிமொழியில் கூடு தலான பரப்பில் பயிர் செய்து  வருவதாகக் குறிப்பிட்டுள்ள னர். ஆனால் அவர்கள் அளித்த விவரங்களுக்கும் நில அடங்கலில் உள்ள விவ ரங்களுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் பிற மாவட் டங்களில் நடைபெற்றிருப்பி னும், இவ்விரு மாவட்டங்க ளில் மட்டுமே அதிகம்  விதிமீறல்கள் கண்டறியப் பட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயி களுக்குக் கடன் வழங்கு வது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கி றது. விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது கூட்டு றவு சங்கத்தின் முக்கியமான பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடை பெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை மீறி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை யைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பயிர்க்  கடன் தள்ளுபடிச் சான்றினை  வழங்கலாம் எனவும், அவர் களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்க ளில் உள்ள 51,017 விவசாயிக ளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு நடப் பாண்டில் மீண்டும் பயிர்க் கடன் வழக்கம் போலத் தொடர்ந்து வழங்கப்படும். இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிக ழாத வண்ணம் உரிய முன்  னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு மேற்கொள் ளும்” இவ்வாறு அதில்  தெரி விக்கப்பட்டுள்ளது.