திருவனந்தபுரம், பிப்.1- ஒன்றிய அரசின் பட்ஜெட் மாநிலங் களை பொருளாதார ரீதியாக வலுவூட்டு வதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜ யன் கூறியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகளை பட்ஜெட் பரிசீலித்த தாகத் தெரியவில்லை. மத்திய வரிப் பங்கு விரைவாக கிடைப்பது மற்றும் கேரளாவில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதி உதவி போன்ற கோரிக்கைகள் பரி சீலிக்கப்படவில்லை. ரயில்வே, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு விலக்குக் கொள்கை மேலும் வலுவாக அமலாக்கப்படும்; மக்களுக்குத் துய ரத்தை ஏற்படுத்திய உலகமய பொரு ளாதாரக் கொள்கைகள் மேலும் தீவி ரப்படுத்தப்படும் என்பதை இந்த வரவு -செலவுத் திட்டம் அப்பட்டமாக காட்டு கிறது. சாதாரண- அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து பட்ஜெட் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையையே அது கொண்டிருக்கிறது. ‘இபிஎப்’ குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காதது, ஊரக வேலை உறுதித் திட்டத்தை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்காமல், வலுப்படுத்தாமல் இருப்பது, ஊனமுற்றோர் ஓய்வூ தியத்தை அதிகரிக்காமல் அல்லது பர வலாக்காமல் இருப்பது ஆகியவை ஒன் றிய அரசின் மனிதாபிமானமற்ற அணுகு முறையை வெளிப்படுத்துகிறது. பிரதமரின் ‘கதிசக்தி’ (இயக்க வியல்) என்ற புதிய திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இது ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்தின் விரிவான ஒருங்கிணைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் இயக்கவியலில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் உறுதியான முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், நாட்டில் பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் கையில் பணத்தை கொண்டு வரு வதன் மூலம் மட்டுமே இதை எதிர் கொள்ள முடியும். ஆனால் பட்ஜெட்டில் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. கொரோனா காலத்தில் சமத்து வமின்மை வெகுவாக அதிகரித்தது. அந்த இடைவெளியை நிரப்ப, நலிந்த பிரிவினரை நிதி உதவி சென்றடைய வேண்டும். ஆனால் அந்த திசையில் எந்த நகர்வும் இல்லை. இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதி கரிப்பது, மாநிலங்களை நிதி ரீதியாக அழுத்துவது, உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பது, பெரு நிறுவன நலன்களை திருப்திப்படுத்து வது ஆகிய கொள்கைகள் நாட்டு நல னையும் பொது மக்களின் நலன்களை யும் பெரிதும் பாதிக்கிறது. மாநிலங்க ளுக்கு பொருளாதார ரீதியில் அதிகார மளிக்காமல் கொரோனா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியை சமா ளிக்க முடியாது என்ற முதன்மையான உணர்வை பட்ஜெட்டில் எங்குமே காண முடியவில்லை. விவசாயம், உணவு மானியம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், கொரோனா தடுப்பு திட்டம் ஆகிய வற்றுக்கு கடந்த ஆண்டு இருந்த ஒதுக் கீடு கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம். இவ்வாறு பினராயி விஜயன் கூறி யுள்ளார்.