tamilnadu

img

தியாகி அசோக் 6ஆம் ஆண்டு நினைவு தினம் சிபிஎம் - வாலிபர் சங்கத் தலைவர்கள் அஞ்சலி

தியாகி அசோக் 6ஆம் ஆண்டு நினைவு தினம் சிபிஎம் - வாலிபர் சங்கத் தலைவர்கள் அஞ்சலி

சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் தியாகி அசோக்கின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், பீர்முகமது ஷா, வாலிபர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தீ.சந்துரு, மாவட்ட அமைப்பாளர் சைலேஷ் அருள், முன்னாள் மாவட்டத் தலைவர் முருகன் கண்ணா, சிபிஎம் தாலுகா செயலாளர்கள் எஸ்.கே.செந்தில், ஆர்.மதுபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.