tamilnadu

img

தாமிரபரணி தியாகிகளுக்கு சிபிஎம் அஞ்சலி

திருநெல்வேலி, ஜூலை 23- மாஞ்சோலை தேயிலை  தோட்டத் தொழிலாளர் களின் 23-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் மலர் வளையம் வைத்து  மலர் தூவி அஞ்சலி செலுத்  தப்பட்டது. ஊதிய உயர்வு கோரி  கடந்த 1999-ஆம் ஆண்டு  மாஞ்சோலை தேயிலை தோட் டத்து தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு உள்ள ரோட்டில்  கோரிக்கை மனு வழங்குவ தற்காக திரண்டு இருந்தனர். அப்போது காவல்துறை யினர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.  இந்த சம்பவத்தில் தாமிர பரணி ஆற்றில் மூழ்கி 17  தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ஆம்  தேதி அனைத்து கட்சிகள் மற் றும் அனைத்து அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில்  மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் நினை வாக மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

நெல்லை கொக்கிர குளம் தாமிரபரணி ஆற்றில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை யன்று மாவட்டச் செயலா ளர் ஸ்ரீராம் தலைமையில் கட்சியின் மத்திய குழு உறுப்  பினர் ஆர்.கருமலையான், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்,  சிபிஎம் மாநிலக் குழு உறுப் பினர் கே.ஜி.பாஸ்கரன், முன்  னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ் ணன் ஆகியோர் மலர் வளை யம் வைத்து மலர் தூவி அஞ்  சலி செலுத்தினர்.  இந்த நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.மோகன், எம். சுடலைராஜ், ஆர்.எஸ்.துரை ராஜ், மாவட்டக் குழு உறுப்பி னர் கு.பழனி, எஸ்.கே.செந் தில், நாராயணன், ஆர்.முரு கன், 55-ஆவது வார்டு மாமன்ற  உறுப்பினர் முத்து சுப்பிர மணியன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்டத் தலைவர் ஆர்.மது பால் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.