tamilnadu

img

சிபிஎம் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் குமாரராஜா காலமானார்

திருவாரூர், செப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர்  மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவ சாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.குமார ராஜா  புதன்கிழமை மாலை காலமானார். தோழர் குமாரராஜா, கட்சியின் மூத்த தலைவர் தியாகி ஜெ.நாவலன் அவர்களின் மருமகன் ஆவார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். துணைவியார் செங்கொடி இருள்நீக்கி ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பில் உள்ளார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த குமாரராஜா, தற்போது வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் புதன்கிழமை மாலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்து திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம்  இருள்நீக்கி ஊராட்சியில்  உள்ள அவரின்  இல்லத்திற்கு நேரில் சென்ற மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், கே.ஜி.ரகுராமன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.  இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறும் என்று சிபிஎம் மாவட்டக்குழு தெரிவித்துள்ளது.