நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்; தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் நடை பெற்று பின்வரும் முக்கிய தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளது.
நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் கோரிக்கை
வறுமையின் பிடியில் உள்ள பெண் கள் நுண்நிதி நிறுவனங்களின் கடன் வலைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். திரு வள்ளூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு போன்ற மாவட்டங் களில் கடன் நெருக்கடியால் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முக்கிய கோரிக்கைகள் l நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். l கேரளாவைப் போல தமிழக வங்கி உருவாக்கி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 4% வட்டியில் கடன் வழங்க வேண்டும். l மதுரை உயர்நீதிமன்றம் 2012-ல் அளித்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். l நுண்நிதி குண்டர்களால் பாதிக்கப்படும் பெண்களின் புகார்களை துரிதமாக விசாரிக்க சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்குக!
தற்போதுள்ள மூன்றடுக்கு கூட்டுறவு வங்கி அமைப்பை பலப்படுத்த வேண்டி யது அவசியமாகிறது. முக்கிய அம்சங்கள் l தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ஒற்றை வங்கியாக மாற்ற வேண்டும். l 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும். l கேரள வங்கியைப் போல சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்
மொழி சமத்துவம் கோரிக்கை
இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க மொழி சமத்துவம் அவசியம். முக்கிய வலியுறுத்தல்கள் l அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும். l நாடாளுமன்றத்தில் அனைத்து மொழி களிலும் உரையாற்ற வசதி செய்யவேண்டும். l உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். l ஒன்றிய அரசு அலுவலகங்களில் மாநில மொழிகளில் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும். l மும்மொழித் திட்டத்தை கைவிட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நகர்ப்புற மக்களுக்கு தூய்மையான மற்றும் பசுமை வாழ்விட சூழலை உருவாக்குவது அவசியம். முன்னெடுக்க வேண்டிய பணிகள் l அனைத்து நீர்நிலைகளையும் முறை யாக பராமரிக்க வேண்டும். l கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். l அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாறு சீரமைப்பு பணி களை விரைவுபடுத்த வேண்டும். l நீர்நிலை பராமரிப்பின் போது ஏழை மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நூலக மேம்பாடு
கடந்த நான்கு ஆண்டுகளாக நூல கங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்பட வில்லை என்பது கவலைக்குரியது. கோரிக்கைகள் l மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கிளை நூலகங்களுக்கு உடனடி யாக புதிய நூல்கள் வாங்க வேண்டும். l நூலக புத்தக கொள்முதல் வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு
68 ஆண்டுகால பொதுத்துறை காப் பீட்டு சேவையை பாதுகாக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நடவடிக்கைகள் l எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது. l தனியார் நிறுவனங்களுக்கான மூல தன வரம்பை குறைப்பது. l பல நிறுவனங்களின் பாலிசிகளை ஒரே முகவர் விற்பனை செய்வது. கோரிக்கைகள் l எல்ஐசி பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும். l ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும்.
தொழிலாளர் பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்
அரசு மற்றும் தனியார் துறையில் உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளில் நிரந்தரத்தன்மையுள்ள பணிகளில் காண்ட்ராக்ட் முறை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புகுத்தப்படுகின்றன. இதற்கு மேலும் மத்திய மோடி அரசு குறிப்பிட்ட வேலை நேர வரம்பை நீட்டிப்பது போன்ற புதிய வடி வங்களில் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகை செய்துள்ளது.
காண்ட்ராக்ட் மயம்
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் மின் உற்பத்தி துறைமுகம், சுரங்கம் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களில் காண்ட்ராக்ட் முறையில் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி பிரிவுகளில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் பன்மடங்கு காண்ட்ராக்ட் தொழி லாளர்கள் எண்ணிக்கையை கொண்டுள்ளன. குறிப்பாக இளம் பெண் தொழிலாளர்கள் இந்த முறையில் பெருமளவில் பணியமர்த்தப்படு கின்றனர்.
அமலாகாத தீர்ப்புகள்
நடைமுறையில் உள்ள தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக பல்வேறு தொழிற் சாலைகள் செயல்படுகின்றன. காண்ட்ராக்ட் தொழிலாளர் சட்டம், சம வேலைக்கு சம ஊதி யம் அமலாக்கம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும் தமிழ்நாடு அரசு அமலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
ஊதியம் இல்லை; ஊக்கத்தொகை மட்டுமே!
ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் கூட வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்வேறு மருத்துவ சேவைகள் திட்டம் அமலாக்கப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் பல்லா யிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிறு தொகையே ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சங்கத்தைப் பதிவு செய்க! தமிழக அரசு தொழிலாளர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளை அமல்படுத்தாமல் மேல்முறையீடும் செய்யும் போக்கை கடைபிடிக்கிறது. இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படு கின்றனர். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம், என்ற தொழிற்சங்க பதிவிற்கான விண்ணப்பம் தாமதமாவது அண்மைக் கால உதாரணம். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை, மேற்கண்ட தொழிற்சங்க பதிவினை உடனடியாக பதிவு செய்யுமாறு மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுக்கு சொந்தமான அரசு போக்கு வரத்து, மின்சார வாரியம், டாஸ்மாக் சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் உள்ள ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்ற முனைப்பு காட்டப்படவில்லை.
வெளிமுகமை என்ற பெயரில்...
உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணிகளை வெளிமுகமை என்ற பெயரில் அர சாணை 159, 135 ஆகியவை வெளியிடப் பட்டுள்ளது. இது பொதுமக்களின் சுகாதாரத்தி லும் தொழிலாளர் வாழ்வின் மீதும் அக்கறை யற்ற போக்கை காட்டுகிறது. ஜவுளி நகைக்கடை வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு இருக்கை வசதி அளித்திடும் அரசாணையை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர், அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட தொழி லாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் 10 ஆண்டுகள் தொகுப்பூதியம், மதிப்பூதி யத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணிவரன் முறைப்படுத்தப்படும் என்றும் அளித்த வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு வலியுறுத்துகிறது.
காலியிடங்களை நிரப்புக!
மேலும் அரசு துறைகள் அரசுக்கு சொந்த மான நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான நிரந்தர பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. வேலை சந்தையில் உழைப்பை செலுத்தும் தகுதியுடைய பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000 என்பதை வழங்கிட ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு பொருந்தும் வகையில் அறிவிப்பு செய்திட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் பல லட்சக் கணக்கான ஊழியர்களை வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி 24 வது மாநில மாநாடு தீர்மானம் வலியுறுத்துகிறது. இத்தீர்மானத்தை இ.முத்துக்குமார் முன்மொழிய, சிவராஜ் (திருச்சி புறநகர்) வழி மொழிந்தார்.
விவசாயிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்க!
நிலம் பறிபோகும் அவலம் உலகளாவிய நிதி மூலதனம் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் பெருமளவில் கார்ப்பரேட் நிறுவனங் களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, சிப்காட், ஜவுளி பூங்கா, உணவு பூங்கா, பரந்தூர் பசுமை விமான நிலையம் போன்ற திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. கூலித் தொழிலாளராகும் விவசாயிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கூலித் தொழி லாளர்களாக மாற்றப்படுகின்றனர். 2023ஆம் ஆண்டின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் தனியாருக்கு வழங்க வழிவகுக்கிறது. விவசாய அமைப்பு களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையிலும், மாநில அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை பிரச்சனை
பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டு விவசாயிகள் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை முறையாக அறி விக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மாநில அரசும் தேர்தல் வாக்குறுதியான நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 என்ற விலையை இதுவரை அறிவிக்கவில்லை. பாசன வசதிகளின் தேவை பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. காவிரி-வைகை-குண்டாறு வைப்பாறு இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியுள்ளது. பயிர்க் காப்பீட்டில் கார்ப்பரேட் லாபம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. 2022-23ல் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.2,319 கோடி பெற்றபோதிலும், விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீடு வெறும் ரூ.560 கோடி மட்டுமே. இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.1,759 கோடி லாபம் அடைந்துள்ளன. தீர்வுக்கான வழிகள் இந்நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு தனது சொந்த பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.