திண்டுக்கல், பிப்.16- பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 வேட்பாளர்களை ஆதரித்து மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். புதனன்று ஆயக்குடி சந்தைப்பேட்டையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் சிபிஎம் வேட்பாளர்கள் டி.வீராத்தாள், எஸ்.பொன்னுச்சாமி, ஆர்.கிருஷ்ணசாமி, பி.அசோகன், எம்.ஈஸ்வரி, எம்.துரையரசி, பி.கோபால், பி.கதிர்வேல், கே.கல்பனா, வனிதா, ஆகியோரை ஆதரித்து பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில், குறிப்பாக பழனி, ஆயக்குடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மகத்தான போராட்டங்களையும் மக்கள் பணிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். ஆயக்குடி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் ஊழியர்களும் ஆற்றிய எண்ணற்ற பணிகளை பட்டியலிட்டார். முன்னதாக ஆயக்குடியில் சிபிஎம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்து மூத்த தலைவர் பி.கே.கருப்புசாமி பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வனஜா, கே.டி.கலைச்செல்வன், சி.பாலச்சந்திரபோஸ், ஒன்றியச்செயலாளர்கள் பி.செல்வராஜ், தெய்வேந்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)