tamilnadu

img

அதானி மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை

திருவள்ளூர், பிப். 20- அதானி மோசடி தொடர்பாக நாடா ளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ‘னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். கட்சியின் மாநில குழு கூட்டம்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யில் திங்களன்று (பிப். 20)  துவங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் உ.வாசுகி,  பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பி னர், மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரகாஷ்காரத் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதானி குழுமம் குறித்து ஹிண்  டன்பர்க் அறிக்கை வெளியாகி உள்  ளது. அதில் அதானி குழுமத்தின்  பல்வேறு சட்டவிரோத நடவடிக்கை களை அம்பலப்படுத்தியுள்ளது. அதானி பங்கு மதிப்புகள் செயற்கை யாக உயர்த்தப்பட்டது. பங்குச்சந்தை யில் மோசடி வேலைகளை செய்து  கருப்புப் பணத்தை வெள்ளையாக் கும் செயல்களும் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் செயற்கையாக பங்கு கள் மதிப்பை அதிகப்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததில் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த மோசடி சம்பவம் வெளி வந்த பிறகு இதுவரை பங்குச்சந்தை யை ஒழுங்குபடுத்தும் செபி, இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை இதில் தலை யிடவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்துவோம் என்ற அறிவிப்பு கூட இல்லை. இந்த பின்னணியில் இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கட்சியின் சார்பில் வலி யுறுத்தினோம். ஆனால் பாஜக அரசு  அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. அதற்கான எந்த காரணத்தை யும் கூறவில்லை. உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவை  அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் பங்கு சந்தை யில் முதலீடு செய்துள்ள சிறு முத லீட்டாளர்களை எப்படி பாதுகாப்பது என்ற நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காகத்தான் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். உச்சநீதிமன்றம் இந்த நிபுணர் குழு அதானி மீதான குற்றங்கள் குறித்து  விசாரிக்கும் என்று கூறவில்லை. ரிசர்வ்  வங்கி, செபி, ஒன்றிய அரசு இது குறித்து பேச மறுக்கிறது. உச்ச நீதி மன்றமும் தலையிட மறுக்கிறது. கடந்த  காலங்களில் நடைபெற்ற பங்குச்  சந்தை மோசடி குறித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசா ரணை நடைபெற்றது. எனவேதான் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

25க்கும் மேற்பட்ட தாக்குதல்

திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி  சட்டமன்றத் தேர்தலில், 90 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. .முடிவு கள் மார்ச் மாதம் 2ஆம் தேதி வெளி வர உள்ளது. திரிபுராவில் ஆளுங்கட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், தாக்குதல்களை தாண்டி மக்கள் வாக்க ளித்துள்ளார்கள். ஆளும் பாஜக வினர் அரசுக்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளது என்ற சந்தேகத்தால் பதற்ற நிலையில் உள்ளனர். இரண்டு  நாட்களுக்கு முன்பு சிபிஎம் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாஜக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குப்பதி விற்கு பிறகு மட்டும் 25க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பாஜகவினர் அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்தி மொழி திணிப்பு குறித்த கேள்விக்கு, நாடு முழுவதிலும் உள்ள  22 மொழிகளும், தேசிய மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மொழிகளையும் பாது காக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண் ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக் குழு உறுப்பினர் என்.நம்புராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.