சென்னை, டிச. 3 - வியட்நாம் சோசலிசக் குடியர சின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹ மின் ஹியு தலைமை யில் 25 கலைஞர்களை கொண்ட குழு ‘வியட்நாம் மக்கள் நட்புறவு கலைக்குழு’ சனிக்கிழமையன்று (டிச.2) சென்னைக்கு வருகை தந்தது. இந்த குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவ லகத்திற்கு வருகை தந்தது. இந்த குழுவினரை வரவேற்று காம்ரேட் டாக்கீஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண் முகம், உலக சமாதானக் கவுன்சில் தலைவர் பல்லப் சென் குப்தா உள்ளிட்டோர் பேசினர். வியட்நாம் குழுவினரை வர வேற்று கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நட்புறவு கலைக் குழுவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அன்புடன் வரவேற்பதாக கூறினார். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பிரதிநிதிகள் இளைஞர்களாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரம்செறிந்த போராட்டம்
மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவும் வியட்நாமும் ஏகாதி பத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்தப் போராட்டத்தை நடத்திய பாரம்பரியம் மிக்க நாடுகள். நாட்டின் விடுதலைக்காக நாங்கள் பல ஆண்டுகள் போராடிய பின்னர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஜப்பான் மற்றும் பல ஏகாதிபத்திய நாடு களால் பல ஆண்டுகள் ஆக்கிர மிப்பில் இருந்த நாடு வியட்நாம். வியட்நாமில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் அனைத்து மக்க ளும் பங்கேற்றனர். அது மற்ற நாடுக ளில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்திற்கு வலுசேர்த்த தோடு ஊக்கமளித்தது. ஏகாதி பத்திய சக்திகளால் வியட்நாம் வடக்கு- தெற்கு என்று பல ஆண்டு கள் பிரிந்து கிடந்தது. ஏகாதி பத்திய சக்திகளால் பிளவுபடுத் தப்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் விடு தலைப் போராட்டத்திற்கு பிறகு 1975 ஆம் ஆண்டு வியட்நாம் ஒரே நாடாக மாறியது. ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல் வியட்நாம் பொரு ளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாகவும் கட்டமைக்கப்பட்டது. சமீபத்தில் எங்களது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி தலைமையிலான சிபிஎம் பிரதி நிதிகள் குழுவினர் வியட்நாம் கம்யூ னிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் உங்களது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட னர். வியட்நாமின் பல்வேறு பகுதி களுக்கு சென்று வியட்நாம் கம்யூ னிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களுடன் உலக நிலைமை கள் மற்றும் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விவாதித்தனர்.
பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடு
கொரோனா வைரஸ் தொற் றால் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல வளர்ச்சிய டைந்த நாடுகள் பெரிதும் பாதிக் கப்பட்டன. ஆனால் சீனாவும் வியட் நாமும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றன. வளர்ச்சி யடைந்த பல நாடுகளால் அந்த நோயை கட்டுப்படுத்தமுடிய வில்லை. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆனால் சோசலிச நாடான வியட்நாமில் சிறந்த மருத்துவம் காரணமாக, இந்த தொற்றால் மிகமிக குறைந்த எண்ணிக்கையி லான மக்களே உயிரிழந்தனர். 10 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் வேளாண் மை, அறிவியல், சுகாதாரம், தொழில். மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள் ளது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மை யிலேயே வியட்நாம் மக்கள் சோசலிச சமூக கட்டமைப்பின் வளர்ச்ச்சியை மகிழ்ச்சியுடன் அனு பவித்து வருகிறார்கள். வியட்நாம் வரலாறும் சோசலிச சமூகத்தின் வளர்ச்சியும் எங்களைப் போன்ற பல நாடுகளுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். இதனைத் தொடர்ந்து மின் ஹியு தலைமையிலான குழு வினர், தோழர் பி.ராமமூர்த்தி உரு வச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.