tamilnadu

பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

சென்னை, டிச. 25- தமிழ்நாட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையான வன உரிமைச் சட்டத்தை விரைந்து செயல்படுத்திடவும், பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் பூர்வீக குடிகளான மலை புலையன், ஈரோடு மலை யாளி, குறவர் இனத்தின் உட்பிரிவுகள் மற்றும், வேட்டைக்காரன் பழங்குடி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். சமீபத்தில் வெளியான ஜெய்பீம் - படத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வாழும், பழங்குடியின மக்களை இருளர், மற்றும்  குறவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு பழங்குடி  மக்களுக்கு இனச்சான்றிதழ், வீட்டுமனை, அரசின் தொகுப்பு வீடுகள், பழங்குடியினர் நல அட்டை, இத்தகைய பணிகளில் தாங்களும், தங்களது அமைச்சர் பெருமக்களும், பழங்கு டியினர் கிராமங்களுக்கு நேரிலே சென்று பல்வேறு நல திட்டங்களை அளித்து வருவது மிகவும் வரவேற்க தக்க அம்சமாகும். சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கல்லார்குடி காடர் இன மக்கள் குடியிருக்க இடம் கேட்டு தொடர் போராட்டம் நடத்திய போது, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திய கோரிக்கையை மின்சாரதுறை அமைச்சரே நேரடியாக சென்று அப்பழங்குடி மக்களுக்கு 21 வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியதும் பாராட்டுக்குரியதாகும்.

வன உரிமைச் சட்டம்...

வனஉரிமைச் சட்டம் 2006 உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டது.  குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 4 லட்சத்திற் கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமே, வனத்தை யும், நிலத்தையும் சார்ந்து தான் உள்ளது. தலைமுறை தலைமுறை களாக வாழ்ந்து வரும் பூர்வீக பழங்குடியின இம்மக்களின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் நில உரிமைச் சான்று (பட்டா) வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், போராடி வருகிறது. தமிழகம் முழுவதும், வன உரிமைச் சட்டத்தை, அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 40,000 மனுக்கள் பெறப்பட்டு, இது வரை சுமார் 8000 பட்டாக்கள் வழங்கப்ப ட்டுள்ளது. சில மாவட்டங்களில் வனத்துறை யினரின் கெடுபிடிகளால், கள ஆய்வு செய்வதும், சர்வே செய்ய முடியாமல் உள்ளது.  இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான மனுக்கள்  விசாரணை செய்யாமல் கிடப்பில் கிடக்கிறது. ஒன்றிய அரசும் - உச்சநீதிமன்றமும் வன  உரிமைச் சட்டத்தின் கீழ் விரைந்து பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க  வலியுறுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் வனஉரிமைச் சட்டம் 2006 ஐ விரைந்து செயல்படுத்தி பழங்குடியின மக்களுக்கு நில உரிமைச் சான்று (பட்டா) வழங்க வேண்டும், வன சிறுமகசூல் சேகரிக்கும் உரிமை யும் துரிதமாக வழங்க வேண்டும்.

பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு

தமிழ்நாட்டில் 1957 வரை மலைப் புலையன், பழங்குடியினர் பட்டியலில் இருந்தனர். அதன் பின்னர் திடீரென்று பழங்குடி பட்டியலிருந்து நீக்கிவிட்டனர். மலைப்புலையன் மக்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி கடந்த 2014 ஆண்டில் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆய்வு செய்து புலையன் இன மக்களும் பழங்குடியினர் தான் என்ற அறிக்கையும் மாநில அரசிற்கு சமர்ப்பித்துள்ளனர். மாநில அரசு, பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட மத்திய அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டு கிறோம். ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசும் ஏற்றுகொண்டு பட்டியலில் சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் முடித்தும் அப்படியே உள்ளது. ஆகவே, முதலமைச்சர்  தலையிட்டு பழங்குடி  பட்டியலில் சேர்த்து அறிவிக்க ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டுகிறோம்.

தமிழகத்தில் குறவர், இனத்தின் உட்பிரிவு களை 27 உட்பிரிவுகளை யும், பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி கலைஞர்  முதலமைச்சராக இருந்த போது 2008 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து ள்ளனர். ஒன்றிய அரசிடமிருந்து சில விளக்கங்  களை கேட்டு, தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு கடந்த காலத்தில் கிடப்பில் போடப்பட்டன. எனவே, குறவர் இனத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பழங்குடி பட்டியலில் இணைக்க இந்திய பதிவாளர் துறை கேட்டுள்ள விபரங்களை துரிதமாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கடந்த 1956 ஆம் ஆண்டு வரை  பழங்குடியினர் பட்டியலில் இருந்த  வேட்டைக்காரன் பழங்குடியினத்தவர்க ளையும் நீக்கி பட்டியலினத்தவர் பட்டியலில் இணைத்து விட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதியிலும், வேட்டைக்காரன் சமூகத்தினை பழங்குடிகள் பட்டியலில் இணைத்திடுவோம் என்று கூறியிருக்கிறது. அதன்படி, வேட்டைக்காரன் பழங்குடி மக்களை பழங்குடி பட்டியலில் இணைக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் பல  ஆண்டுகாலமாக நிரப்படாமல் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பி பழங்குடியினத் தவருக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டுகிறோம்.