தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
(படம்1) திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆர்.கவிதா , 11வது வார்டு சிபிஐ வேட்பாளர் செல்வராஜ், 10வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி ஆகியோரை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
(படம்2) கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி சிபிஎம் வேட்பாளர்கள் எஸ்.ஸ்டாலின்குமார், ராஜேஸ்வரி ஆகியோரை ஆதரித்து கடைவீதிகளில் வாக்கு சேகரித்தார் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.
(படம் 3) கும்பகோணம் மாநகராட்சி 34வது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆ.செல்வத்தை ஆதரித்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார்.