tamilnadu

img

மாணவர்கள் ஹரிஷ்-ஹரிசக்தி குடும்பத்திற்கு சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்!

கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக் கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாராய வியாபாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை யன்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவிரோத சக்திகளின் இந்த இரட்டை படுகொலையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடி யாக மயிலாடுதுறையில் போராட்டம் நடத்தியது. இந்நிலையில், திங்களன்று முட்டம் கிராமத்திற்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள், மாணவர்கள் ஹரிஷ் - ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோரைச் சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.