tamilnadu

சிபிஎம் கேரள மாநில மாநாடு தொடங்கியது

பி.ராகவன் நகர் / கொச்சி, மார்ச் 1- வானில் செங்கொடி பறக்கிறது என்கிற ஆவேச மூட்டும் கொடிப் பாடலுடன் சிவப்பு பலூன்கள் விண்ணை  நோக்கி பறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது கட்சி கேரள மாநில மாநாட்டு செங்கொடியை கொச்சி மரைன் டிரைவில் உள்ள பி.ராகவன் நகரில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தலவட்டம் ஆனந்தன் ஏற்றி வைத்தார்.  இம்மாநாடு 4 ஆம்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. ரத்தசாட்சி (தியாகி) மண்டபத்தில் மலர்கள் சொரிந்தும் முட்டி உயர்த்தி செவ்வணக்கம் செலுத்தியும் பிரதிநிதிகள் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைந்த னர்.  

வரவேற்புப் பாடலுடன் மாநாடு தொடங்கியது.  தியாகிகளை நினைவுகூரும் அஞ்சலி தீர்மானத்தை இ.பி.ஜெயராஜனும், இரங்கல் தீர்மானத்தை ஏ.கே.பாலனும் முன்வைத்தனர். மாநாட்டை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். பி.ராஜீவ் வரவேற்றார். இ.பி.ஜெயராஜன் ஒருங்கிணைப்பில் சூசன் கோடி, ஏ.ஏ.ரஹீம், சச்சின் தேவ், ஓ.ஆர்.கெல்லு ஆகியோர் மாநாட்டுக்கு தலைமை தாங்கினர். மாநாட்டில் 400 பிரதிநிதிகள் மற்றும் 23 பார்வை யாளர்கள் கலந்துகொண்டனர். அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, எம்.ஏ.பேபி, பிருந்தா காரத், ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செய லாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்தார். குழு விவாதம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் நான்காண்டுகளின் செயல்திறனை மதிப்பீடு செய்து புதிய கேரளாவைக் கட்டியெழுப்பு வதற்கான கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கேரளாவின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் வகையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான முதல்வர் பினராயி விஜயன், செவ்வாயன்று மாலை 4 மணிக்கு கொள்கை ஆவணத்தை தாக்கல் செய்தார்.